பூநகரிக்குத் தெற்கே நேற்று மாலை முதல் இரவிரவாக கடும்சமர் இடம்பெற்றுள்ளது.
58-3வது பிரிகேட் துருப்பினர்
நேற்று மாலை 6.10 மணிளவில் செம்பன்குண்டுவில் இருந்த புலிகளின் நிலைகள் மீது தாக்குதலைத் தொடுத்தன.
இதையடுத்து கடும் சண்டை மூண்டது. இரவிரவாகப் பல மணிநேரம் நீடித்த மோதலை அடுத்து செம்பன்குண்டு சதுப்பு நிலத்தை படையினர் தாண்டியிருப்பதாகவும் இது புலிகளுக்கு இயற்கை அரணாக இருந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சமரில் படையினர் பலர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமுற்றதாகவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது படையினர் மன்னாரில் இருந்து 75 கி.மீ தூரத்தை கடந்திருப்பதாகவும் பூநகரிக்குத் தெற்கே 7கி.மீ தொலைவில் நிலைகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் புலிகள் தரப்பில் இருந்து இதுபற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.